இருபத்தைந்தில் நான்

எனதிந்த இருபத்தைந்தாண்டுகள் பற்றியும், நான் என்னைச் சுய விமர்சனமும், சுய மதிப்பீடும் செய்து கொள்வதற்கான முயற்சி இந்தப் பதிவு. பதிவில் சுயபுராணம் வெகுவாகப் பரவிடக் கூடாதென்ற சுயவிமர்சனத்துடனும், சுய எச்சரிக்கையுடனும் இவ்விடம் தொடங்குகிறேன். 
 

ஆவணப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமான ஒரு காரியம் என்று எனக்குப் புரிந்தது மிகச் சமீபத்தில் தான். காட்டுத் தீ போல அடுத்தடுத்த தலைமுறை தலைமுறையாக பரவிவந்த கதை என்னும் வரலாற்று காட்டுத் தீ , நம் தலைமுறைக்குப் பிறகு தீயும் தன் தாகம் குறைத்து தனல் பூக்கத் தொடங்கிவிடுமோ என்ற பயம் கலந்த வருத்தம் உண்டு. 

வானம் பார்த்தபடி , மண் தரை விரிப்பில் அமர்ந்து , பாட்டிகள் அம்மாக்கள் மடியில் என் தலை சாய்த்து , நான் கேட்ட கதைகள் அப்போது நான் அன்னாந்து பார்த்த வானத்தை விட மிகப் பெரியது. 
கதை சொன்னதால் தானோ என்னவோ அவர்கள் எனக்கு அவர்கள் தாத்தாவாகவும், பாட்டியாகவும் தெரிந்தார்கள். ஒருவேளை அவர்கள் கதைகளே சொல்லியிருக்காவிடில் நமக்கவர்கள் வயதான கிழவர்களாகவும், கிழவிகளாகவும் மட்டுமே நாம் எண்ணியிருக்கக் கூடுமோ என்னவோ?…
அடுத்த தலைமுறைக்கு நம்முன்னோர் நமக்களித்த அறிவைக் கொண்டு சேர்க்கவில்லையெனில் நம் வரலாறோ அல்லது நம் இனமோ அழிந்து விடுமா என்று கேட்டால் இது அழிவின் முடிவல்ல இது அழிவின் ஆரம்பம் மட்டுமே என்று கூறலாம்.
நமது வரலாற்று ஆய்வுகளை நாம் சற்று ஆய்ந்து பார்த்தால் நம்மைச் சுற்றி நடந்த பெரும்பாலான அகழ்வாய்வுகள் அனைத்தும் அந்நியர்களால் நடத்தப்பட்டதே ஆகும். வரலாற்று ஆய்வு என்ற சுயபுராணம் மட்டும் நமக்குப் பிடிக்காமல் போனதன் காரணம் என்னவோ தெரியவில்லை. 
நாம் வரலாற்றிலிருந்து பெற்றுக் கொண்டதை விட , பெறாமல் விட்டதே அதிகம். 
ஒரு சமயத்தில் , நம்முடன் கி.மு வின் சமகாலத்தில் வாழ்ந்த நியண்டர்தால் என்னும் மனித இனம் இருந்ததற்க்கான சுவடுகள் வரலாற்றிலும், நம் ஜீனிலும் இல்லாமல் போனத இதற்கான உதாரணம். 

பாட்டி சொன்ன கதைக்காகவா இவ்வளவு உள் கதைகள் எனக் கேட்டால் ?, கதை சொல்வதும், கதை கேட்பதும் பொழுது போக்குக் காரியம் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இதுவும் ஒரு வகைப் பண்டமாற்றமே.

 
அது,இது என்ற ஐந்தறிவிலிருந்து அவர், இவர் என்ற ஆறறிவில் நாம் ஆட்சி செய்வதற்கு காரணம் கருத்துப் பரிமாற்றம் என்ற பண்டமாற்றமே. 

கொடுப்பதும்,பெறுவதும் பண்டமாற்றத்தின் காரியம் என்றால் இந்தக் கதைப் பண்டமாற்றத்தில் நமக்குக் கொடுப்பவர் நம்மிடமிருந்து பெறுவதில்லை, நம்மிடமிருந்து கதை பெறுபவர் நமக்கு கதையை திரும்பச் செலுத்தப் போவதும் இல்லை. இக்காரணத்தால் எக்கதையும் தொடர்கதை தானோ?
இருபத்தைந்து ஆண்டுகள் திரும்பிப் பார்க்க எண்ணிய நாம் , இப்போது கடந்து சென்றது இருப்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கும் மேல். ஆம் , நியண்டர்தால் மனிதன் நமக்கு ஆதி காலத்துப் பங்காளி அல்லவா. 

காரணம் மறந்த காரியமாக இந்தப்பதிவு நீண்டு விடக் கூடாதென்று இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் ( அதாவது கி.பி 1992 ) ற்கு உங்களைக் கொண்டுவந்து உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
1992 ல் இருந்து 2009 வரையான இடைப்பட்ட இந்தப் பதினைந்து வருடங்கள் என்னைப் பொருத்தவரை எனக்கான கற்காலம் அது. 

சிக்கிமுக்கிக் கல் கொண்டு வாழாமல், கல்லிலும் முள்ளிலும் சிக்கி விளையாடிய காலமது. 

பொதுவாக ஆண் பிள்ளைகள் பிறந்த சில வருடங்களுக்கு பெண் பிள்ளைகளாகவே அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு தெரிவார்கள் போலும், சிக்காத முடியில் சின்னச் சிண்டும், நிக்காத பூவைத் தலையிலும் வைத்துக் கொண்டாடிய காலமது , என் கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்று மடி தூக்கி வைத்த அத்தைமார்களின் செல்லமாக அன்று நான் செய்த சேட்டைகளை இன்று அவர்கள் சொல்லி நான் கேட்க்கும் போது வெட்கம் பிடுங்கித்தான் தின்றுவிடுகிறது. 

என் பள்ளிப் பருவத்தில் என்னுடன் பள்ளிக்குப் பேருந்து ஏறிய கௌரவ் என்னும் நாய் ( கௌரவ் : பெயர்க்காரணம், அந்த பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏதோ ஒரு super hero தொடரின் முதன்மை கதாபாத்திரத்தின் பெயரது) . அடுத்து வந்த நாட்களில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தன்னுயிர் இழந்தது. இன்று வரை எனைப் பாதித்த இழப்புகளில் ஒன்று அது. 

பதினொன்றாம் வகுப்பில் சேர நேரும் போது, கணிதப் பிரிவு கடினம் என்று யாரோ சொல்லிய செவி வழிச் செய்திக்காக அக்கணிதப் பிரிவில் சேர மறுத்து அப்பள்ளியை துறந்து, அதன் பின் அருகில் படிக்க பள்ளியில்லாமல் மறுபடியும் அதே பள்ளியில் நான் அடம்பிடித்து சேராத முதல் குரூப்பில் என்னை விட அதிகமாக அடம்பிடித்து என்னை அதில் சேர்த்து விட்ட என் தமிழ் ஆசிரியரை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் என் நெடும் பயணத்தில் நன்றி சொல்ல. நான் வைக்காத நம்பிக்கையை என்மேல் வைத்தவரல்லவா அவர்.

விவசாயக் குடும்பமும் , startup companyயும் கற்றுக் கொடுப்பதில் துரோணாச்சார்யா என்பதில் ஆச்சரியமில்லை. அவ்விடம் கற்றதை  மேலாண்மை பட்டப் படிப்புகள் கற்றுத் தர முடியுமா என்பது விவாதித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. 
நான் வேண்டாமலே எனக்கிந்த இரண்டும் அமைந்தது இனி வரும் காலங்களில் நான் செய்ய வேண்டிய செயல்களின் பலனோ என்றும் கூட எண்ணிப் பார்ப்பதுண்டு. 

எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறந்த ஒன்றென்றால் அது ஐயமில்லாமல் அருண்(Founder of “Me” & GUVI) என்ற அண்ணாவைச் சந்தித்தது என்பேன். எனக்கான முகவரியும், முதல்வரியும் எழுதியவரவரே. 
இன்றுவரை நான் பிரமித்து பார்க்கும் வெகுசில மனிதர்களில் அவர் ஒருவர். 
 கோயம்பத்தூரைக் நான் கூட கடந்து சென்றதில்லை அன்றென்னை அவர் சென்னைக்கு வரச் சொல்லிய போது. 
அவரிடமுருந்து நான் கற்றதையும், பெற்றதையும் பதிவேற்றினால் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போல பல பகுதிகள் நீளும். 

காரணம் தெரியாத காரியமாக  இருந்ததாலோ என்னவோ என்னை பயிற்றுவித்த கல்வி சற்று சோம்பலாகிப் போனது, கல்லூரிக் காலத்தில் கண்டறிந்த காரணத்தால் எனை விற்க நான் தேடிப் பயின்ற காலமது. 
அலாவுதீன் விளக்கைத் தேய்த்து கிளம்பிய பூதமாய், எனைத் தேய்த்து அப்போது நான் ஒரு கண்டது எனைக் கொண்ட programming என்ற பெரும் பூதம். 

“நான்” என்ற இவ்விரு எழுத்தை நானாகச் சொல்வதற்கு ஏறக்குறைய இருபதாண்டுகள் பிடித்தது. 

MCAவிற்க்குப் பிறகான என் நாட்கள் தினமொரு மனிதனாய் எனக்கு என்னையே அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. அடிக்கடி எனக்கான அறிமுகத்தை மாற்றுமளவு நாடோடியாய் என் விருப்பத் தேர்வுகள் உள்ளது. 

எனக்கான என்னை, நான் protagonistஆக பார்க்க ஆரம்பித்ததே இருபதுக்கு பிறகு தான். 

25 ஆண்டுகள் எனக்கான கால்,அரை,முக்கால் வாழ் ஆண்டாக இருக்குமோ என்று யோசிக்காமல்,அது முக்கால் ஆண்டாகவோ அல்லது முழு ஆண்டாகவோ மாறும் வரை காத்திராமல் இப்போதிருந்தே உரியவர்களுக்கு என் மனம் சார்ந்த நன்றி சொல்வது சந்தோஷப் பட வைக்கிறது. 
இந்த 25ல் இழப்புகளை எண்ணிப் பார்த்தால் அது இழப்பாக மட்டும் தெரியாமல் நான் கற்றதும் பெற்றதுமாகத் தெரிகிறது, தடுமாற்றமெல்லாம் விபத்துகளில்லையே!

நானிழந்ததாயிரத்தில் சிறந்ததெதுவென்றால்?…

இனி வரும் இழப்புகளில் ஏதாவதொன்றிலதிருக்குமதென்பதிலிருக்கிறது இன்றுவரை இருந்ததின் சந்தோஷம்….



என் தவறுகளும், சரிகளும் கற்றுக் கொடுத்தளவிற்கு வேறெந்தப் புத்தகமும் எனக்கான புரிதலைக் கொடுக்கவில்லை. 
இப்போதுள்ள மனநிலையில் எனக்கு வரப்போகும் தடுமாற்றங்களையும், விபத்துக்களையும் அழகாய்ச் சொல்வதெப்படி என்ற என்னத்திலே கரைந்து செல்கிறது அந்தச் Setback. 
இங்கு பதிவிட்ட பெரும்பான்மையான பகுதிகளை நீண்ட பத்திகளாகச் சொன்னால் பல பாகங்களில் சொல்ல வேண்டி வரும் , எனவே சுருங்கச் சொல்லி ஒருசில பக்கங்களில் சுருக்குகிறேன். 

வாசகா, ஓ வாசகா! 

என் சமகால சகவாசி,வாசி! 

புரிந்தால் புன்னகை செய். 

புதிரென்றால் புருவம் உயர்த்து. 

பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து. 

எனது கவி உனதும்தான். ஆம், நாளை உன் வரியில் நான் தெரிவேன்.


-கமல்ஹாசன் 

என்ற கமல்ஹாசனின் கூற்றின் கடைசி வரியின் உருவம் என் எவ்வெழுத்திலும் தெரிவதாக என் சில வரிகள் கொடுத்த வாய்ப்புகளில் நினைப்பதுண்டு. 
தசாவதாரத்தின் முன்னுரையில் தொடங்கியது கமலின் எழுத்து மீதான முதலீர்ப்பு, அன்று முதல் ஏகலைவனாய் என்னுள் ஓருவன் கமல் என்னும் கவிஞனை நோக்கி. 


என்னெழுத்தின் திறனென்னவென்றால் நான் எண்ணத் துணிந்தவற்றை அதன் தன்மை குறையாமல் என் மை கொண்டெழுதத் துணிவதென் திறனென்பேன். 




இன்றுவரை நான் சேர்த்த சிறு பொற்குவியல் இதைப் படிக்கும் நீர் என்பது நீர்த்துப் போகாத உண்மை.
இவ்வளவு சொல்லியும் , எவ்வளவோ சொல்ல மீதமிருப்பதாய் ஓர் உணர்வு…

நட்புடன் 

நான்

ரகுபதி 

13-09-2017

27 thoughts on “இருபத்தைந்தில் நான்

      1. Akka, knowingly and unknowingly you are inspiring many people to become a artists. One of my colleague started to try the same kind of drawing works which you did were posted in your blog, surprisingly you are following her blog too.

        I have a small suggests akka, you are great artist but your works speaks a lot when it speaks about any social problems. Few days back you were posted a pic about rain drops( I’m not sure whether it’s exactly about rain, execuse my bad memory). Especially that post received a lot positive response from us. So please do your art works based on social issues or social thoughts. I will make others to think. I think, from stone age time Art is one of the best medium to make a impact in our living. So pls try to make on it too akka. Other than that you are such a inspiring akka with your heART and suggests.

        Today i had a discussion with my friend who is following your blog about your blog.

        Like

      2. That’s interesting, hope you had good discussion. I am not trained artist. I started posting drawings recently. I used to draw on my own interest when I was a student then after marriage I completely stopped. Inspired by one of the blogger Shaloo I felt why can’t I start drawing. Before I use to write, now its like only drawing and photography. I believe positive thoughts can create positive vibration so I wish to spread positivity. Even now if I get time I wish to write . But drawings gives me immerse happiness.

        Liked by 1 person

      3. I didn’t draw anything regarding rain, ragu. There are few people here who gives me strength through their words other than that I don’t remember as I had more comments, all my recent posts have more or less equal comments and likes. And I am not at all trained I didn’t attended any drawing class I am doing for my satisfaction as Gandhi ji told I want to be the change I wish so I decided to speak, tell write only good because from humans words can come good.

        Like

      4. That’s about war, while a person is cutting tree assuming that person is war and trees are humans another person in distance says stop cutting but he is not watering that is love to the plants near him , that plants are don’t ill treat others like jealousy, talking bad about others. That means we are not spreading love to persons nearby but we are telling war to stop, only the small act of spreading love each other can bring big change.

        Like

      5. All my drawings has a message, in recent drawing loneliness I said, the solution of all our problems or whatever we need in life is within us. That’s in alone we hear our inner voice. Each drawing has messages like this now I am having work, if you want I Will tell freely.

        Like

      6. Great akka, Actually i thought of asking you to write the message along with each of your drawings akka. in your leisure time, pls try to give a description in each of your art.

        Like

      7. I believe everyone will understand that its really simple, so only some are giving good comments. I will show everything to my eldest daughter . Thiruvalluvar didn’t write meaning for thirukkural he believed its enough, its our mistake we need a explanation for that. I am writing for my satisfaction . This is how some of kamal sir’s statement is treated. We have to improve our standard of thinking.

        Like

      8. surely everyone will understand , but there maybe a plus or minus degrees of changes in what they understood from what it meant.

        Like

      9. Akka, you have it always 🙂 I’m Happy for that. Actually i was in deep thinking about your thoughts, that you compared with Kamal sir’s thought with artist point of view, so only i replied back in short words akka. In my mind i was running with Kamal’s approach(He close to art) and Rajini’s approach (He close to people), which one is suitable to reach view audience, kind of thoughts went in my thoughts.

        Like

      10. Reaching people is different from reaching wise people. That’s difference, we have to be wise . Being wise makes us humans, kamal sir is wise and trying to make his followers wise. Maybe rajini sir is wise but he is not trying to make his followers wise. He wants people to be innocent and he wants to use that innocence. Kamal sir wants us to be wise that maybe difficult but not impossible, humans are created or humans are meant to be wise.

        Like

      11. Well said, I’m entirely agree with your view on wise and making wise, especially the legends suits to this example.

        Like

      12. Kaviarasar Kannadasan wrote lyrics in cinema each of his lines gives new meaning each time we hear it. It will make us to think gives more deeper meaning. Danush also writing songs that will make us to dance for few minutes its reaching mass that doesn’t mean its good than that. Kindly think you youths has the ability to change so think wisely. I wish no danush or Rajini fans will read this.

        Like

Leave a comment